Monday 6th of May 2024 09:29:50 PM GMT

LANGUAGE - TAMIL
.
யாழ். ஏழாலையில் இரத்த தான நிகழ்வை தடுத்து சுற்றிவளைத்தது இராணுவம்!

யாழ். ஏழாலையில் இரத்த தான நிகழ்வை தடுத்து சுற்றிவளைத்தது இராணுவம்!


யாழ். ஏழாலையில் இரத்ததான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அதிகளவான இராணுவத்தினர் குவிக்கப்பட்டு சுற்றிவளைப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

ஏழாலை உதயசூரியன் சன சமூக நிலையத்தினரது ஏற்பாட்டில் இரத்தான நிகழ்வும், மர நடுகை செயற்பாடும் இன்று (நவ-29) காலை 8.30 மணிகன்கு முன்னெடுக்கப்பட இருந்த நிலையில் அங்கு சென்ற இலங்கை இராணுவத்தினர் நிகழ்வை நடத்துவதற்கு தடை விதித்துள்ளதுடன் குறித்த பகுதி சுற்றிவளைக்கப்பட்டு முற்றுகையிட்டுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்தவர்கள் தொடர்பில் தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டு சுற்றிவளைப்பு முற்றுகைக்குள் உதய சூரியன் சன சமூகநிலையம் கொண்டுவரப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பதற்றமேற்பட்டுள்ளதாக அங்கிருந்து அருவி இணைத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் பிறந்த நாளான நவம்பர்-26 மற்றும் மாவீரர் நாளான நவம்பர் 27 ஆகிய இரு நாட்களிலும் இரத்ததான நிகழ்வுகளை முன்னெடுக்க யாழ்ப்பாணத்தில் உள்ள இரத்த வங்கிகளுக்கு இராணுவத்தினர் தடைவிதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE